உன் நினைவுகள்

நினைக்கவே
இனிக்கிறது நீ
சிரித்தது.வாயிலிருந்து
உயிர் வரை இனிக்கிறது.
உன் வாய் முத்தம்
உலகே உறங்கினாலும்
என்னில் உறங்கா
உன் நினைவுகள்.....
எதுவும் செய்யத்தோணவில்லை
உஉன்னைத்தவிர
நீயில்லாத இந்த
ஒரு நாளில் என்னை நான்
எண்ணிணேணில்லை
விம்மலாய் வெடித்துக்
கண்ணீர் கொட்டத்தயாராயிருப்பினும்
மனங்கனத்தே நான்.!
எதற்கு சிரித்தாய்
என்றெண்ணும் முன்.,
ஏன் கண்ணிலிருந்து
மறைந்தாய்.?
நெஞ்சில் ஆறா
வடுக்களை விட்டுச்செல்லும்
ரணமாய் உன் பிம்பம்
என் மனக்கண்ணாடி
தூளாய் நொறுங்கினாலும்
ஒவ்வொரு துளியிலும்
உன் பிம்பம்..,
ஆனால் நீ இல்லாத
நரக வாயிலிலும்
பூ பூக்க வைக்கிறது
உன் நினைவுகள்.!

எழுதியவர் : sana (24-Feb-18, 2:10 pm)
சேர்த்தது : Sana
Tanglish : un ninaivukal
பார்வை : 385

மேலே