வீண் பேச்சு

விண்ணைத் தொட்டு ஒரு பெண்
சாதனை புரிந்தாலும்,
திண்ணை தோறும் வெற்றிலை மென்று சவடால் பேசும் மடமையர்,
வெண்ணெய் முழுங்க அடியாள் வைக்கும் அசமந்தர்கள்,
ஊர் கூடி ஒன்றானால் வயிறெரிந்து
அது தடுக்கும் அசமஞ்சர்கள்,
அடலைமுடலை பேசியே ஆயுள் கடத்தும் விடலைகள்,
எப்போது முன்னேறும் நாடு?
வன்முறை காவடி தூக்கும் இவர் கூடும்சாவடிகளைதேடிசாகடியுங்கள்;
பாரதம் முன்னேற்ற பல்லாக்கில் முனைப்போடு முன் போகும்★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (1-Mar-18, 4:14 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : veen pechu
பார்வை : 100

மேலே