முதுமொழிக் காஞ்சி 38
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது. 8
- துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.
பதவுரை: அறிவிலி - அறிவில்லாதவனை,
துணைப்பாடு - ஒருவன் துணையாகக் கொண்டிருத்தல்,
தனிமையின் - தனித்திருத்தலின்; துவ்வாது - நீங்கி யொழியாது.
அறிவில்லாதவனைத் துணையாகக்கொண்டிருப்பது தனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே அறிவில்லாதவனைத் துணைக்கோடல் வேண்டா.
சிற்றினம் சேராமல் பெரியாரைத் துணைக் கொள்க.என்பதாம்.