பெண்கள் தினம்
எமது பாரத நாட்டின் தனித்துவமானவள்
அழகின் திருஉருவம், அரவணைப்பில் நீ மறுஉருவம்
பிரம்மன் படைத்த ஒரு அழகிய ஓவியம்
அஞ்சாத துணிச்சல் கொண்டது உமது காவியம்
உமது கூந்தலின் வாசம் முல்லைப்பூ போல் மணக்கும்
அதனினைக் கண்டு எமது மனமோ வியக்கும்
புன்னகை மாறாத முகமோ உமது சிகரம்
வாழ்க்கைக்கு தேவை பந்தம், உந்தன் நற்பணிகளே எமக்கு சொந்தம்
தோகையை விரித்து ஆடும் மயிலுக்கு நிகராய் விளங்கும் பெண்மணியே..!
உம்மை கரம் கூப்பி பெருமிதம் கொள்கிறது எமது கவிதை ......