மணமேடையில் நான்

மங்கள வாத்தியம் முழங்க
மண மேடை பூக்கள் மணக்க

மணமகனாய் நீ அமர்ந்திருக்க
மணமகளாய் மாறி விரைகிறேன்

பெண்ணுக்கான நாணம்
பெயருக்கேனும் இல்லாமல்...

பட படக்கும் இதயம்
பறந்து விட்டது மாயமாய்

மாப்பிள்ளையாய் உனைப் பார்த்தும்
மனதில் பரவசம் தோணவில்லை

மேள தாளம் முழங்கினாலும்
மள மள கண்ணீர் விழியில் இல்லை

தாலி கட்டும் நேரம் கூட
தலையில் வெட்க குணிவு இல்லை

அன்பான உன் முகம் கண்டு நாண
ஆன வரை முயன்று தோற்றேன்

முழுமையாக முடிந்தது
அருமையான கல்யாணம்

அழகுப் பிள்ளைகள் புடை சூழ - எங்கள்
அறுபதாம் கல்யாணம்

துணை(வன்) தான் நீ எனக்கு
துணை(வி) தான் நான் உனக்கு

துரத்தும் முதுமை கடந்திடலாம்
துணிவுப் புன்னகை
பூத்துக் கொண்டோம் - மனதில்.

🌺இன்னிலா🌺

எழுதியவர் : இன்னிலா (17-Mar-18, 1:18 pm)
Tanglish : manamedaiyil naan
பார்வை : 92

மேலே