புகைப்பட நினைவுகள்

புகைப்பட .நினைவுகள்

புகையாய் எழும்பி
மனதின் நினைவுகள்
தட்டி எழுப்பி,

அன்றைய நிகழ்வுகள்
நினைவில்

இவைகள் எதுவுமே திரும்ப
வராது அழுத்தும்
நிஜம் !

விழிகளின்
ஓரத்தில் கோர்த்து நிற்கும்
கண்ணீர் !

நம்முடன் இருந்து
பின் இல்லாமல் இருப்பவர்கள்
இருந்தும் பிரிந்தவர்கள் !

எதிரில் சலனமில்லாமல் !

தடவி பார்த்து மகிழ்கிறேன்
இளமை கால புகைப்படங்களை
கண்களில் கண்ணீருடன் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Mar-18, 3:40 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 659

மேலே