ஓட்டைக்குடம்
எதையாவது நினைந்து
தவிக்கிறது..
அதுவா?இதுவா?
என தாவுகிறது..
கிடைக்காததை எண்ணி
புலம்புகிறது...
கிடைத்துவிட்ட பின்
ச்சீ..என சலிக்கிறது..
அற்பங்களுக்கும்
அஞ்சுகிறது...
சமயத்தில் என்னிடம்
கெஞ்சவும் செய்கிறது...
எவ்வளவு ஊற்றினாலும்
நிறையாத
ஓட்டைக்குடம்!
இந்த மனது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
