நீ வருவாய் என
கனவு பல கண்டு
ஏக்கங்கள் பல கண்டு
உறவுகளை தொலைத்துவிட்டு
விழி மறந்து
காதல் கொண்டு நீ வருவாய் என
காத்திருக்கிறேன் வசந்தமே
உயிரெனப் பழகி
இடைவெளியை தந்து விட்டு போனாலும்
என்னை இழந்து விட்டு உன்னை தேடுகிறேன் கண்மணியே நீ வருவாய் என
தேனாக சொட்டிய வார்த்தைகளில்
காதல் உறுதியை உணர்ந்ததால்
உறுதி கொண்டு இருக்கிறேன்_மல்லிகையே
நீ வருவாய் என
எதுவும் செய்ய இயலாமல்
மனதிற்குள் அணையாமல்
காத்திருக்கும் காதலை
கரம் பிடிக்க நீ வருவாய் என
பயணங்களில்
பயணிக்க இயலாது தவிக்கிறேன்
நீ வருவாய் என