மழையாய் பொழிகிறேன்

மழையாய் பொழிகிறேன்-உன்
சிரிப்பின் அழகாலே!
மரமாய் முளைக்கிறேன்-உன்
உயிரின் விதையாலே!
காட்டு தீ போலவே
என்னுள்ளே ஏறுது
உன்னையே பார்க்கவே
காதிலே கூறுது!!
நீ என்னை பிரிந்தாலே-என்
உலகம் நகராதே!
நீ என்னை மறந்தாலே-உயிர்
துளியும் இருக்காதே!!

பேசுர சாக்குல
இதயத்த(தை) பேக்குற!
பூக்களை போலவே
தினமும் நீ பூக்குற
வானத்திலே உள்ள
நட்சத்திரம் போலே-நீயும்
என்னை ரசிச்சாயே
சொல்லாமலே வரும்
மழையை போலே-நீயும்
என்னைப் பார்க்க வந்தாயே
காலம் அது நீளும்-உனை
பார்க்கும் போதெல்லாம்!
நீளும் நேரம் எல்லாம்
கவிதை எழுதினேன்!!

அரங்கினில் ஏறிடும்
நடிகனாய் மாறினேன்
பயத்தை எந்நெஞ்சில்-பூட்டி
உனை பார்க்கிறேன்!
சொல்லாமலே நீயும்
என்னைக் கொன்று-காதல்
சொர்கத்திலே அடைத்தாயே!
தோட்டத்தில் உள்ள
பூவை போலே-என்னை
தொட்டிலுள்ளே அடைத்தாயே
காதல் வயப்பட்டு-உனை
காணத் துடித்தேனே
காதம் காலம்-எல்லாம்
கதையாக்கினேன்!!!

எழுதியவர் : sahulhameed (8-Apr-18, 7:03 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 74

மேலே