கனவுகளின் ஓநாய்

எப்போதும் இருக்கும்
என் கவிதை உன்னருகில்.
எவருமற்ற அறையில்
உன் மனம் விடாது
தேடிக்கொண்டேயிருக்கும்
எவ்வொருவர் மீதிலும்
இக்கவிதை இருக்கும்.
உனது வானத்தில்
உனக்கு பெய்யும் மழையில்.
உன் விசும்பலில்
பிறாண்டலுக்கு மருந்தாய்.
உன் கோட்டையில்
தூவப்பட்ட விதையாய்.
நீ அணையவியலா
மரத்திலொரு பறவையாய்.
உன் குற்றத்தை
நியாயமாக்கும் வன்மமாய்.
உன் வாய்ப்புகளில்
களங்கம் நிரம்பிய மனமாய்.
நீ பதுக்கிய
ஆணுறையில் நம்பிக்கையாய்.
நீ என்பதிலிருந்து
நீயற்று போகும் இறுதிவரை
உன்னை விரட்டி வரும்
கனவுகளின் ஓநாயாய்.

எழுதியவர் : ஸ்பரிசன் (13-Apr-18, 6:23 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kanavugalin onai
பார்வை : 60

மேலே