ம்மௌனா

அத்தனை
நேரங்களுக்குள்ளும்
உன்னை அடைப்பிட்டுவைத்திருக்கிறேன்

இனி வரும்
அனர்க்க நிமிடங்களை
ஏதும் கேட்காமலோ சொல்லாமலோ
இப்படியே
கலைந்துவிடுவோமா
என் தொலைதூர தொடக்க முடிவில்
காடு சமைப்பவள் நீ
என் மௌனவெளிப்பரப்பில்
அனற்பாலைச்சொரியும்
சூரியதாகம் நீ

""ம்மௌனா""

என்ன சொல்ல வருகிறாய்
சிலநேரம்
உன்னை ஆராயும் நிலையை
எனக்குள்
ஏன் கொண்டு தருகிறாய்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (15-Apr-18, 1:03 am)
பார்வை : 105

மேலே