மகிழ்வுடன் வாழ்வோம்
உயிர்வாழப் பிறந்தோரே
--உண்மையை உணர்வீரே !
பாலூட்டி வளர்க்கின்றாள்
--பாசத்துடன் தாயவளும் !
கடமையை ஆற்றுகிறார்
--கருத்தாக தந்தையும் !
ஆற்றலுடன் புகட்டுகிறார்
-- அறிவுபெற ஆசானும் !
நினைப்பதும் உண்டா
--நித்தமும் நொடிநேரம் !
உருவாக்கிய சிற்பிகளை
--உள்ளத்தில் ஒருவேளை !
நமக்காக பாடுபட்டோரை
--நானிலத்தில் உள்ளவரை
நன்றியுடன் நாள்தோறும்
--நாமும் வணங்கிடுவோம்!
உள்ளவரை உலகத்தில்
--நினையாதீர் சாதிகளை !
அகற்றுங்கள் நெஞ்சினில்
--பிரித்தாளும் மதங்களை!
உதவிடுங்கள் இயன்றதை
--ஏதுமில்லா ஏழைகளுக்கு!
நிரந்தரமிலா வாழ்வினில்
--மகிழ்வுடன் வாழ்வோம் !
பழனி குமார்
18.04.2018