மகிழ்வுடன் வாழ்வோம்

​உயிர்வாழப் பிறந்தோரே
--உண்மையை உணர்வீரே !
பாலூட்டி வளர்க்கின்றாள்
--பாசத்துடன் தாயவளும் !
கடமையை ஆற்றுகிறார்
--கருத்தாக தந்தையும் !
ஆற்றலுடன் புகட்டுகிறார்
​-- அறிவுபெற ஆசானும் !

நினைப்பதும் உண்டா
--நித்தமும் நொடிநேரம் !
உருவாக்கிய சிற்பிகளை
--உள்ளத்தில் ஒருவேளை !
நமக்காக பாடுபட்டோரை
--நானிலத்தில் உள்ளவரை
நன்றியுடன் நாள்தோறும்
--நாமும் வணங்கிடுவோம்!

உள்ளவரை உலகத்தில்
--நினையாதீர் சாதிகளை !
அகற்றுங்கள் நெஞ்சினில்
--பிரித்தாளும் மதங்களை!
உதவிடுங்கள் இயன்றதை
--ஏதுமில்லா ஏழைகளுக்கு!
நிரந்தரமிலா வாழ்வினில்
--மகிழ்வுடன் வாழ்வோம் !

பழனி குமார்
18.04.2018

எழுதியவர் : பழனி குமார் (18-Apr-18, 3:27 pm)
பார்வை : 547

மேலே