நான்ஆர்யன்

வீட்டுக்கு அடிக்கடி
வரும் ரசூல் பின்னர்
வீட்டு மாடியிலேயே
தையல் கடையை
போட்டுக்கொண்டார்
வாடகை எதுவுமின்றி.
அம்மா சொன்னாள்
அது தாத்தா என்று...
அப்போது 3 வயதிருக்கும்.
சினிமா எப்போதும்
எங்களுக்கு ஓசிதான்.
சூரியநாராயண தியேட்டரில்...
அங்கு போனால்
தேவர் உட்கார்ந்து இருப்பார்
ஐஸ்க்ரீம் தருவார்.
நடிகர் S.S.R ன் அப்பா
என்று சொல்வார்கள்.
யாருக்கு வேண்டும் அது...
ஐஸ்க்ரீம் தாத்தாதான் அவர்...
அப்போது வயது 7 ஆகும்.
ஒந்தாயி தினமும்
தப்பாமல் வருவாள்...
பத்து பாத்திரம் தேய்க்க
ஊருக்கு வெளிய
ரொம்ப தூரம் தள்ளி வாறேன்
என்றபடி போகும்போது
பாட்டிக்கு காபி கொடு
போவென்று விரட்டும் என் பாட்டி
வயது 12 இருக்கும்.
போய் சேர்ந்தார்கள்.
சேர்ந்தவர் நினைவுகள்
குளத்து கூழாங்கல்லாய்
துருமறு எதுவுமின்றி
அப்படியே இருக்கிறது.
பூணூல் போட்டனர் எனக்கு.
வயது 14 இருக்கும்.
ரசூல் பொண்ணு
ஜெரினா இன்றும் வருகிறாள்.
தேவரின் பேரர்கள்
இன்றும் வருகின்றனர்.
ஒந்தாயி பேத்தி
கயல்விழி இன்றும் வருகிறாள்.
பேசுகிறோம். சிரிக்கிறோம்.
எனது பூணூல் எப்போதும்
அவர்களை உறுத்தவே இல்லை.
நீ மட்டும் ஏன்
என்னை ஆர்யன் என்கிறாய்?
என்னில் இல்லாத ஜாதியை
எனக்கு ஏன் கற்பிக்கிறாய்?
உன் ஆவல் அதுவானால்
ஆம்...நான் ஆர்யன்.
திமிர்கொண்ட தினவு கொண்ட
ஆர்யன் நானே...

எழுதியவர் : ஸ்பரிசன் (17-Apr-18, 7:59 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 74

மேலே