அழுகிறோம் ஆசிஃபா

இது முதல்முறையல்ல என்றபோதும்
முழுவதுமாக அடக்க இயலவில்லை
முட்டிக்கொண்டு வரும்
அழுகையையும் ஆத்திரத்தையும்!

கண்ணீர் ஊரிக் கனத்துப்போன இக்கவிதையை
கள்ளமில்லா அக்குழந்தையின்
கல்லறைக்கு காணிக்கையாக்குகிறேன்!

மதவெறியின் காம இச்சைக்கு
மயிலொன்று இறையாகியிருக்கிறது!

கால் பிடித்துக் கேட்கிறேன்
இனி காந்தி தேசம் என்று
அழைக்க வேண்டாம்
இக்களங்கப்பட்ட பூமியை!

அப்படி அழைக்கப்படும்
அத்தனை முறையும்
ஆடையின்றி நிற்பதாக எண்ணி
அவமானம் கொள்ளும் இனி
அத்தனை காந்தி சிலைகளும்!

மிருகங்கள் என்று சிலரைக் குறிப்பதுகூட
மிருதுவான ஒப்பீடாகிவிடுகிறது
சில நேரங்களில்!

காட்டு விலங்குகள்கூட
காமத்தின்பொருட்டு
குட்டிகளைக் குறிவைப்பதில்லை!
அதெப்படி முடிகிறது
ஆசனவாய் வழி பிறந்த
அரக்கர் சிலரால்?

மழலை மாறாத வாயில்
மயக்க மருந்து திணித்து,
பிஞ்சுக் கால்களை
பின்புறமாக முறித்து,
குயில் குஞ்சொன்றை
கூட்டு பலாத்காரம் செய்து
கழுத்து நெரித்து
கல்லால் சிதைத்து.....

இதயத்தின் நாளமெல்லாம்
இருமடங்காய்த் துடிக்கிறது!
கவிதை மேல் விழுந்து எந்தன்
கண்ணீர்த்துளி தெறிக்கிறது!

குதிரை மேய்த்துத் திரிந்த
குறும்பாட்டுக்குட்டியை
குதறித் தீர்த்திருக்கின்றன
சில குரூரப் பேய்கள்!

அத்தனையும் நடந்து முடிந்திருக்கிறது
ஆண்டவன் அயர்ந்துறங்கிப்போன
ஆலயம் ஒன்றில்!

கன்றுக்குட்டியைக் கண்டும்
காமம் வருமா?
பட்டாம்பூச்சியைப் பார்த்தும்
பலாத்கார எண்ணமா?

காக்கிச் சட்டையும்
காவி வேட்டியும் இணைந்து
காலத்தால் அழியாக் கறையை
காஷ்மீரத்து வரலாற்றில்
கலந்துவிட்டிருக்கின்றன!

எதைநோக்கிச் செல்கிறது இந்நாடு
என எப்போதும்போல் கேட்டுவிட்டு
கடந்து போகக்கூடியதல்ல
இக்காட்டுமிராண்டித்தன நிகழ்வு!

உருப்பறுப்பு தண்டனை கூட
உதவாது இவர்களுக்கு!
உருப்பெரித்துப் பின்
உடல் பிளந்து
ஊளையிடும் நரிகளுக்கு
உணவாக்க வேண்டும்!

ஆனால் முகர்ந்து பார்த்துப் பின்
முகத்தில் காரி உமிழும் அந்நரிகள்!

உளவியல் நோயின் உச்சத்தில்
சீழ்பிடித்த சிந்தனையோடு
பாரதமெங்கும் பரவிக்கிடக்கும்
இது போன்ற கொடூரர்களை
இனம் காணவேண்டியது
இன்றைய இன்றியமையாத இலக்கு!

மரபணு மாற்றம் செய்தேனும்
மதவெறி இல்லா
புவியமைப்போம்!
வரைமுறை தாண்டிய வக்கிரங்கள்
வளராதிருக்க இனி
வழி சமைப்போம்!

-நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (17-Apr-18, 7:36 pm)
பார்வை : 88

மேலே