கருவாச்சி அம்மா

அடியே என் அழகே...

என் வெள்ளி நிலவே...

இந்த பூமியிலே அழகே
நீதான் என் கருவாச்சி...

நீ இல்லாத என் வானம் ஒளி வீசாதாடி...

என்ன வழி நடத்தும் தேவதையும் நீதானடி...

என் மடியில உன்ன வச்சி தாலாட்டுவேன்...

என் கண்ணு இமையே சிமிட்டாம உன்ன காப்பேனடி...

காலம் முழுவதும் உன் காவலாக உன்ன சுத்தி வருவேண்டி...

என் உயிரே நீதானடி என்ன பெத்த என் தேவதை...

அடியே என் அழகே...

என் வெள்ளி நிலவே...

இந்த பூமியிலே அழகே
நீதான் என் கருவாச்சி...

நீ இல்லாத என் வானம் ஒளி வீசாதாடி...

என்ன வழி நடத்தும்வ தையும் நீதானடி...

உன் கைய புடிச்சிகிட்டு...

நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என் வாழ்வின் சொர்கம்...

என் ஜென்மம் எழும் உன் காலடிய பின் தொடரும் வரம் வேணும்...

எவ்வளவு சண்ட போட்டாலும் என் காலம் முழுதும் உன் கையில சாப்பிடனும்...

அடியே என் அழகே...

என் வெள்ளி நிலவே...

இந்த பூமியிலே அழகே
நீதான் என் கருவாச்சி...

நீ இல்லாத என் வானம் ஒளி வீசாதாடி...

என்ன வழி நடத்தும் தேவதையும் நீதானடி...

என் கூட சின்ன சின்ன சண்ட போட்டாலும்...

அடுத்த நொடியே பேசிடனும்...

உன் அழுகாட்ச்சியே வேணாம் என் கருவாச்சி...

நீ சிரிக்க கோமாளியா கூட மாறுவேன்...

என் தேவதை என்ன சுத்தி சுத்தி விளையாடனும்...

அப்படியே உன் முகத்தை பார்த்து சிரிச்சிகிட்டே என் உயிரும் போயிடணும்...
-செல்ல புள்ள பெரியண்ணன்...

எழுதியவர் : அ.பெரியண்ணன் (1-May-18, 2:48 pm)
சேர்த்தது : அ பெரியண்ணன்
Tanglish : karuvaachchi amma
பார்வை : 649

மேலே