பிரிவு வரும் அழுகை வரும்
மூன்று வருடங்களுக்கு பிறகு
வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பினேன்
என்னை கண்டதும்
தேம்பி தேம்பி அழுதாள்
எதுக்குடி அழுவுற என்று கேட்டபடி
அவளை அணைத்தேன்
சிரித்தாள்
கண்ணீர் துளி ஒன்று
அவளின் முதுகின் மேல் விழுந்து
காட்டிக்கொடுத்துவிட்டது