நான் என்ன செய்ய

உன் குருதியை பாலாக்கினாய்
உன் குருதியை வியர்வையாக்கினாய்
உன் அன்பை அரவணைப்பில் காட்டினாய்
உன் அன்பை கண்டிப்புடன் காட்டினாய்
உன் பாசத்தில் பரிவை சேர்த்தாய்
உன் பாசத்தில் பக்குவத்தை சேர்த்தாய்
உன் பண்பை ஊட்டினாய்
உன் அறிவை பகிர்ந்தாய்
உன் சோகத்தை சிரிப்பில் ஒழித்தாய்
உன் மகிழ்ச்சியை மனதில் வைத்தாய்
உன் அனைத்தும் எனக்கே தந்தாய்
உமக்காக நான் என்ன செய்வேனோ???

எழுதியவர் : கார்த்திகா (4-May-18, 11:43 am)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : naan yenna seiya
பார்வை : 342

மேலே