ஒரு பூவின் ஆசை
கடவுளின் கழுத்திற்கு
மாலையாக ஆசையில்லை
பிறந்த நாள் விழாவிற்கு
மலர்க்கொத்தாக ஆசையில்லை
கவிஞர்களின் கற்பனைக்கு
கருவாக ஆசையில்லை
மரண படுக்கைக்கு
மலர்வலயமாக ஆசையில்லை
பூவே உன் ஆசை தான் என்ன ?
தாய் நாட்டிற்க்காக தன்னுயிர் ஈந்த மாவீரனின் காலடியை அலங்கரிக்க
இந்த பூவிற்கு ஆசை !!!