குறுக்குப் பாதை

நேரே போய்க்கொண்டிருந்த பாதையை
யாரோ ஒருவன்,
குறுக்கே செலுத்தினான்.
ஆற்றுமணல் கிடைத்தது.
கிரானைட் கற்கள் கிடைத்தன.
குளங்கள் நீர்நிலைகளைத்
தூர்வாராமல் தூர்த்தான்.
கல்லூரி, பல்கலை கட்டினான்,
கல்வி வள்ளல் ஆனான்.

புறம்போக்குகளை ஆக்கிரமித்தான்.
புதிய புதிய கல்வி நிறுவனங்கள்.
மாணவர்கள் கற்றார்கள்.
மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

ஐஸ் விற்றவன், தேநீர் விற்றவன்,
தேநீர்க்கடையில் அரசியல் பேசியவன்,
வேலை இல்லாமல் ஊர் சுற்றியவன்
வீடு, மனை விற்றவர்கள்.
பத்தாண்டுகளில் புத்தாடையுடன்
பவனி வருகிறார்கள், கார்களில்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (19-May-18, 3:37 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 58

மேலே