சிறந்த மன்னிப்பு கவிதை
தவறுகள் தப்பாக தெரிவதில்லை
தனிமை உணர்வு என்னை தேடும் வரை...!!!
என் மனமோ மன்னிப்பு கேட்பதில்லை
உன் நினைவுகள் என்னை வாட்டும் வரை...!!!
மாறும் காலநிலையில்
மாற்றங்கள் என்னை தொடர,
மனம் ஏங்கும் தருணமோ,
மன்னிப்பு என்ற வார்த்தை சொல்ல...!!!
என்ன நீ சொல்வாயோ..?
மறுத்து விடுவாயோ?
இல்லை அனைத்தையும் மறந்து
மனதார மன்னித்து விடுவாயோ..!!!
பிழைகள் ஏதும் நான் செய்தாலும்,
பிரியாமல் இரு என் உறவே...!!!
கோவம் ஏதும் இருந்தாலும்,
கூடவே இரு என் உயிரே...!!!
பேசாமல் ஏதும் நான் இருந்தால்,
பாசத்தோடு இரு என் நட்பே...!!!
நினைக்க ஏதும் மறந்தாலும்,
நீங்காமல் இரு என் மனமே..!!!