ஆய்க்குலப் பெண்ணும் ஆநிரையும்

ஆய்க்குலப் பெண்ணும் ஆநிரையும்..!
==================================


திருமூர்த்தி மூவரின் தெய்வத் தன்மையை
..........தன்னுள் கொண்டுள்ள தெய்வீகப் பசுவாம்..!
திருப்பணிகள் நடக்கு மிடத்தில் தர்மத்தின்
..........உருவாய் உனக்கு உண்டு முதல்மரியாதை..!
திருமூலரும் சொன்னார் அறம் வளர்க்கவே
..........அருகம்புல் கொடுங்கள் பசுவுக் கென்றார்..!
திருக் கோவிலுள் தெய்வத்திற் கிணையாக
..........திருமகளாம் பசுவுக்கு மங்கே இடமுண்டு..!


வசுதேவன் மகனால் பசுவுக்குப் புகழதன்
..........வால்முதல் தலைவரையில் தெய்வீக முண்டு..!
பசுவென்றால் பெண்பாலே!அது கொடுக்கும்
..........பெருங் கொடையதுவாம் பாலும் நெய்யும்..!
அசுத்தத்தைச் சுத்தமாக்கும் அதன் சாணம்
..........அது கழிக்கும் சிறுநீரும் அருமருந்தாகும்..!
விசுவாசம் கொண்டே அதனை வளர்ப்பார்
..........வீட்டில் அதுவுமொரு செல்லப் பிராணியே..!


மாநிலம் தழைக்க மாடுகன்றைக் காக்கவும்
..........மகத்தான திட்டமொன்றை வகுக்க வேணும்..!
ஆநிரை அழித்தலைத் தடுத்திட நீங்களும்
..........அறிவுப் பூர்வமாய்ச் சிந்தித்திடல் வேணும்..!
கைநிறையப் பொருளீட்ட ஒரு வகையில்
..........கால்நடை அபிவிருத்தியும் மிக வேணும்..!
ஆநிரை மேய்க்கப் போகுமிளம் பெண்ணே
..........ஆய்ச்சி யராவதற்கு ஆனாயனருள் வேணும்..!

========================================
நன்றி:: வல்லமை வெளியீடு::12 -5 -2018
நன்றி படம்:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (21-May-18, 10:48 am)
பார்வை : 63

புதிய படைப்புகள்

மேலே