மறுபிறவி

மன்னர்களுக்கு
மக்கள்
மாக்களாய்
இருந்ததை மாற்றி தந்த
முன்னோர்களின்
பிள்ளைகளை
மாற்றானுக்கு
மாக்களாய்
மாற்றிய
ஆளும் அரசுகள்..!!!

தனலாய் போனது
என் நெஞ்சம்..
நானும் அந்த மாக்களில்
ஒருவன் என்பதை
மறந்து...!!!

இன்று தூத்துக்குடி..!!
நாளை தாய் தமிழ்நாடு..!!
மறுநாள் பாரதமோ..!!!

மண்ணையும்
வளத்தையும்
மலடாக்கி மானுடம்
பிழைக்குமா..!!!

அரிதாரம் பூசி
நிற்பவர்கள்
அதிகாரிகளும்
ஆட்சியாளர்களும் தான்..
அப்பாவிகளின்
ரத்த பூச்சால்..!!!

மானுடம் பிழைக்க
மனிதம் தழைக்க
மறுபிறவி
எடுத்திடுவாளோ
பூமித்தாய்...!!!

அப்படியேனும் அழிந்து
பிறப்போமே..
இத்தனை குரூரங்களையும்
பார்ப்பதற்கு
பதிலாக..!!!

எழுதியவர் : (23-May-18, 10:32 pm)
Tanglish : marupiravi
பார்வை : 62

மேலே