கிழியுமோ மேப் துண்டுகளாக

புறக்கணிக்கப்பட்ட
அதன் ஆன்மாவில் இருந்து
வெளியேறின பறவைகள்.
தொடங்கப்படுமுன்
முடிக்கப்பட்ட பொய் வரிகள்.
ஓலைக்குடிசையின் சிரங்கில்
காற்று நிரம்பிய் குடங்களில்
கருவறுக்கும் கயமைகளில்
தலை வெளுத்து
அலையும் என் தேசம்.
பசியில் அது தின்றது
கனவுகளையும்...
எடுத்தெறிந்த கற்பனைகளும்.
ஓயாது தின்ற என் தேசம்
அமைதியற்ற குடலுடன்...
விடுதலை வேள்வியில்
சிந்திய ரத்தங்களில்
கால் கழுவியவர்கள்
மட்டும் அரியணையில்.
ஒரு கேள்விதான்
என்று மலரும் சுதந்திர தாகம்?

எழுதியவர் : ஸ்பரிசன் (29-May-18, 7:25 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 76

மேலே