ஒரு கதறல் படியுங்களேன்

ஒரு கவிதை படியுங்களேன்
இல்லையெனில்
கழுதையின் கதறலென்றாவது?
எங்கள் இதயத்தை
தைத்த முள்ளின்
கூர்மை உங்கள் கண்களுக்கு
மழுங்கியதாய் தோன்றினால்
ஊனப்பட்டது
எங்கள் நெஞ்சமல்ல
உங்கள் சிந்தை...
மாசு ஏற்றபட்ட
காற்றையும் நீரையும்
ஸ்வீகரிப்பது நாங்கள்
மட்டுமென நினைத்தால்
மனம் கொடுத்து
கேளுங்கள் உங்கள்
வாகன புகைபோக்கியிடமும்
உங்கள் வீட்டு சாக்கடையிடமும்...
கடை மறிக்கிறதென
வெட்டப்பட்ட மரத்தின்
வேரின் இரத்த கறை
நிச்சயம் படியாது
வாங்கிய உடையிலும்
உடன் தீபாவளிக்கு
இலவசமாய் தரப்போகும்
மரக்கன்றின் இலையிலும்...
இது சுத்தமான பூமி
மனிதர்களை தவிர்த்தால்...

எழுதியவர் : சுரேஷ்குமார் (30-May-18, 11:15 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 2135

மேலே