ரயானா பாத்திமா

செல்லகுட்டி ரயானா....

என் அம்முக்குட்டி ரயானா

ஆளை மயக்கும் அழகு கன்னம் - காண்போரை
தூக்கிஅடிக்கும் துரு துரு பார்வை

அம்சமான பிஞ்சு கைகள் - பார்ப்போரை
பித்து பிடிக்க வைக்கும் கண்கள் !!!

நிலவு நெற்றியில் முத்தமிட்டால்
நிமிடத்தில் முழித்துக்கொள்வாய் !

முழித்து முழித்து எங்களை
அழகு பார்வையால் மூழ்கடிப்பாய் !

கையில் தூக்கி கொஞ்சம் கொஞ்ச நினைத்தால் - அய்யோ
அலார சத்தம் அலறி அடிக்குதே!!!

இளவரசனான என் அண்ணனுக்கு பிறந்த
குட்டி இளவரசியடி நீ !

உன் நினைவு பூத்து
இன்றோடு ஒரு வருடம் ஆகிறது ..

அன்று 5வது நோன்பு
நோன்பு வைத்தும் பஞ்சாமிர்தம் சாப்பிட்ட உணர்வு எனக்கு ...

என் அல்லிப்பூ அண்ணிக்கு
அழகு தேவதை பிறந்ததென்று !!!!

ஆஹா ....
நெஞ்சில் ஓர் படபடப்பு
சீராக இல்லை என் இதய துடிதுடிப்பு

என் கால்கள் நிற்கவில்லையே ஓரிடத்தில் ....
மணிநேரத்தில் நான் மருத்துவமனையில்......

அனைத்து சொந்தங்களும் சூழ
ஒரு பந்தம் உன்னை கையில் ஏந்தி ...

அப்போது தான் உன் காதில்
முதல் பாங்க் ஒலித்தது ....

மாதங்கள் உருண்டோடின
நாட்கள் பறந்தோடின ......

ஆனால்...

உன்னை முதலில் பார்த்தது மட்டும் ....
அப்படியே என் கண்ணில் தேங்கி நிற்கிறதடி ....

இன்று உன் பிறந்த நாளாம்!!!
சொன்னார்கள் .....
ரசிக்கத்தெரியா உன் ரசிகர்கள் ....

எந்த கவிஞனின் கற்பனைக்கும் எட்டாதா..
கவிதை ஒன்றின் பிறப்பு நாள் .....இன்று ...

இன்றளவு ஒன்றும் புரியாது உனக்கு
என் கவிதையை நீ அறியும் வயதில் ...

அத்த ..அஅ அ .....

என்று..
.
ஓடிவந்து கட்டியணைப்பாய்!!!
என் கன்னத்தில் அழகிதழ் முத்தம் பதிப்பாய் ......

அந்த ஒரு நிமிடத்துக்காக ....
பாசத்தோடு காத்திருக்கும்
உன் அத்தை ...
பர்வின்...

எழுதியவர் : hums (1-Jun-18, 6:56 am)
பார்வை : 505

மேலே