திருநெல்வேலி

திருநெல்வேலி
முன்னொரு காலத்தில் மூங்கில் காடு...
இன்று
மூன்றெழுத்து செல்லப்பெயர் 'நெல்லை' நாடு...
பாண்டியர் ஆண்ட பைம்பொழில் நகரம்...
இது
பாரதி தந்த பைந்தமிழ் சிகரம்...
'பொருநை' நதியும் பொங்கிப் பாயும்...
இங்கு
பொதிகைச் சாரலும் பொன்மொழி பேசும்...
ஏலே! வாலே! என்றுதான் பேசுவோம்...
உலகின்
எல்லா ஊருக்கும் எங்கள் அன்பினை வீசுவோம்...

எழுதியவர் : சுரேசன் (9-Jun-18, 12:13 pm)
சேர்த்தது : சுரேசன்
Tanglish : thirunelveli
பார்வை : 101

மேலே