உன் அருகில் இல்லாத பிறந்த நாளை

உன் அருகில் இல்லாத பிறந்த நாளை
நானும் என் கவிதையும் கொண்டாடுகிறோம்
உனக்கும் எனக்கும் நடுவில் கவிதை ஒரு மொழியாக இருந்தது
எனது முதல் கவிதை உன்னை பற்றியே பிறந்தது
இன்று வரை எவ்வளவு கவிதை…
எப்பொழுதெல்லாம் உன்னை பிரிந்தாலும்
ஒரு கவிதை உன்னை பற்றி எழுதினால் போதும்
அந்த பிரிவு கூட சற்று புன்னகை சேர்க்கும்
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில்
கண்டு மயங்கியுள்ளேன்….
உன் ஒவ்வொரு வண்ணமும் என் கவியில் அடங்கும்
உன் ஒவ்வொரு அசைவும் என் பேனா அறியும்
முதல் முத்தம் முதல் மொத்தமும் அதில் அடங்கும்
உன் கண்ணாடி காட்டா அழகை கூட என் எழுத்துகள்
காட்டியுள்ளன
உன்னை குட்டியானவள் என்று கேலி செய்தாலும்
அந்த குட்டி அழகை கவிதைக்குள்ளும்
மனதினுள்ளும் தேக்க முடியாது
குட்டிக் குரங்கு நீ
உன்னை நான் சாகும் வரை எழுதினாலும் மகிழாது
என் மொழியும் அயராது
நீ என்றும் என் மனதால் மணம் ஆனவள்
இந்த மழலைக் காதலை முதிர்விலும் பாடுவேன்

எழுதியவர் : maxin (9-Jun-18, 7:08 pm)
சேர்த்தது : Maxin
பார்வை : 176

மேலே