காதல்ல சிக்கிக்கிட்டியா
ஒரு மார்க்கமா சுத்திகிருக்க...
தனியா எந்நேரமு பேசிக்கிருக்கனு சொல்றாய்ங்க...
எப்டி கூப்ட்டாலும் திரும்பி பாக்ரதில்லையாம்ல...
உன் பார்வ ஒரு தினுசா இருக்காம்ல...
ஒரே இடத்துல கொள்ள நேரம் உக்காந்துக்கிருக்கியாம்ல...
புதுசா எழுதிப் பழகுறியாம்ல...
அட வெட்கப்பட்ரனு சொல்ராய்ங்க...
கவிதலாம் சொல்லிக்கிருக்கியாம்ல...
ஒரு உலுப்பு உலுப்புனாதேன் இந்த உலகத்துக்கே வரியாம்ல...
என்னா காதல் மாட்டிக்கிட்டியா...