பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே

'மணமகன் தேவை' திரைப்படத்தில் கே.டி. சந்தானம் பாடல் எழுதி, ஜி. ராமநாதன் இசையமைப்பில் நடிகர் சந்திரபாபு பாடிய ஒரு அருமையான பாடல் ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’.

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (2)
தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே (2)

கட்டானி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை (2)
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

(பம்பரக் கண்ணாலே)

கண்டவுடன் காதலே கொண்டாளென் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது, என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?

திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிக்கிறேன் (2)
தங்க சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே

(பம்பரக் கண்ணாலே)


  

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-18, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 447

சிறந்த கட்டுரைகள்

மேலே