527 இவறியான் செல்வத்தை எல்லாரும் தமதென்பர் – பன்னெறி 7

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

தமதென உலோப ரீட்டுந்
தனத்தினைக் கொடுங்கோல் மன்னர்
எமதென இருப்பர் கள்வர்
எமதென்பர் கிளைஞ ரெல்லாம்
உமதெம தெனவா திப்பர்
உலகென தென்னும் யாமும்
எமதென்போம் பாரந் தாங்கி
நலிவதென் பிசின ரம்மா. 7

– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

இவறன்மை (கஞ்சத் தன்மை) யுடையோர் தேடித் தொகுத்து வைத்துள்ள பொருளினைக் கொடுங்கோல் மன்னர் தமது என்று இருப்பர்.

கள்வர் ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பதனால் தமதென்பர்.

உறவின் முறையாரும் ஈட்டியவன் மாண்டொழிந்தால் உமக்கும் நமக்கும் பங்காகும் என்று தமதென்பர்.

உலகமும் தமது என்னும். யாமும் நமது என்போம்* இந்நிலையில் அவ் இவறி வீண் சுமையாகப் பொருளைச் சுமந்து துன்புறுவது எதன் பொருட்டு?

பிசினர்-இவறன்மையுடையார். இவறி-உலோபர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-18, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே