கமலி

என் பெயர் கமலி..

அழகிய பெயரை
எனக்கு வைத்தவர் யாரோ? தெரியவில்லை..

அரவணைக்க ஆளில்லா
அனாதை நான்..
ஆனால்
என் அம்மாவின்
செல்லமகள் நான்
என் கனவில்..

பள்ளிச் செல்லா
பிள்ளை நான்..
ஆனால்
வகுப்பில் முதல்
மதிப்பெண் நான்
என் கனவில்..

அழுக்குச் சட்டை
அணிந்த அழுக்குப்
பெண் நான்..
ஆனால்
அழகான ஆடை
அணிந்த அழகோவியம் நான்
என் கனவில்..

மழைக்கு ஒதுங்க
இடம் தேடும்
அவலப்பெண் நான்..
ஆனால்
மாளிகையின்
இளவரசி நான்
என் கனவில்..

பசிபோக்க கிடைத்ததை எல்லாம் உண்பவள் நான்..
ஆனால்
விதவிதமாய் ரசித்து
உண்கின்றேன்
என் கனவில்..

தெருவோரக் குப்பைகளில்
ஒருத்தியாய் நான்..
ஆனால் தேவலோக
தேவதை நான்
என் கனவில்..

தினம் தினம்
அழுகின்றேன் நான்
ஆனால்
தினம் தினம்
ஆளுகின்றேன் நான்
என் கனவில்..

எழுதியவர் : கலா பாரதி (29-Jun-18, 12:22 pm)
பார்வை : 54

புதிய படைப்புகள்

மேலே