எண்சீர் விருத்தம்-இயற்கையே எதிரி

மரங்களையே வெட்டுவதும் மணல்தனையே வழிப்பதுவும்
..........மானமிலா மாந்தர்கள் முழுமனத்தே செய்வார்கள்..!

அரசியலார் வியாபாரி இடைத்தரகர் என்றெல்லாம்
..........ஆர்வலரும் இதிலதிகம் ஆங்காங்கே பதுக்கலுமாம்..!

இரவென்றும் பகலென்றும் இவர்களுக்குப் பேதமில்லை
..........இயற்கைக்கே இவரெதிரி இத்தொழில்தான் நிரந்தரமாம் ..!

வரவிருக்கும் வந்திருக்கும் வகையான சட்டத்தால்
..........வலுவாக ஒன்றுமிதை வென்றிடாத் தோல்விதானே..!
==================================
கா = கா = கா = கா = எண்சீர் விருத்தம்
==================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (2-Jul-18, 10:43 pm)
பார்வை : 87

மேலே