கனவிலும் நீ தானடா

இரு புறமும்
மரங்கள் நிறைந்திருக்க ...
நிழலில் இருவரும்
கைக்கோர்த்து சாலையில் நடக்க ....
வேடிக்கைப் பார்த்தபடி நான்
உன்னை காணாதவள் போல் நடிக்க ...

என்னை தோளோடு இடித்தபடி
என்ன ? என நீ கேட்க ,
நான் ஒன்றும் அறியாதவள் போல்
என்ன ? என நானும் கேட்க ;

அழகான நம் காதல் கொஞ்சம்
வெட்கத்தில் புன்னகையாய்
இதழோரம் பூத்துக்கொண்டது .....
கண்கள் ஏதோ ஈர்த்துக் கொள்ள ஆசைப்பட்டது ....

இதயம் இரண்டும் வெகுநேரம்
கதைபேசிக் கொண்டது போல ,
ஆனால் நீயும் நானும் பேசாமலே
நடந்துகொண்டிருக்கிறோம் ...

ஏதோ ஒரு சப்தம் என் காதோரம்
வருகை தர ,
என் கருவிழிகள் வெளிச்சத்தால்
மெதுவாக கண் கதவுகளை திறந்து
எட்டி பார்த்தது ;
தலையில் நான் கொட்டியபடி
ஓ கனவா ? என சிரித்தபடி எழுந்துகொண்டேன் ....

எழுதியவர் : Deepikasukkiriappan (6-Jul-18, 9:01 pm)
பார்வை : 378

மேலே