பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மாலை பொழுது உன்னால் தானோ ,
என்னவளே...
உன் மஞ்சள்முகம் கண்டு,
சூரியன் மயங்கிடும் நேரம் அதுவோ..!
கருமேகம் அலைமோதும் உன்னால்தானோ,
என்னவளே...
உன் விழிகள் கண்டு,
விரண்டோடும் நேரம் அதுவோ....!!

பூக்கள் பூத்துக் குவிகிறது உன்னால்தானோ,
என்னவளே,
நீ மலர்கள் கொண்டு
மாலை தொடுத்திடும்
காலம் அதுவோ...!!
எல்லாம் ,
இங்கு உனக்காக பிறந்திட,,,
அவை,
அனைத்தும் உனக்கு இன்பம் சேர்திட,,,
நீ மீண்டும் மீண்டும்
இப்பூமியில் மலர்ந்திட,,,
"என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
என்றும் அன்புடன்....,
இரா. பாலு
(Dream killer

எழுதியவர் : பாலு. ரா (11-Jul-18, 5:02 pm)
சேர்த்தது : Dream killer BALU
பார்வை : 186

மேலே