நட்பின் பாதை
கல்லூரியின் முதல் நாள்...
அறியாத இடம்......
அறிமுகமற்ற முகங்கள்,
எத்திசையும் புதுமைகள்!
உள்ளத்தில் பழமையின் ஏக்கமும்,புதுமையின் அச்சமும்...
சற்று நேரம் கடந்து,அருகில் திரும்பும் பொழுது,
இரு பார்வைகள் சேரும் பொழுது ,உள்ளம் அறியா புன்னகையில் ஒரு அறிமுகம்
மொழியின் பகிர்வில், மலர்ந்தது நட்பு........
அருகில் சென்ற நடை பயணங்கள் மாறி,
தோளின் மேல் தோளிட்டு, கடக்க தொடங்கினோம்......
காலங்கள் கடந்து ,நம் பாதைகள் பிரியும் நேரமும் வந்தது......
கடந்தேன் என் கல்லூரி வாழ்க்கை பாதையை உன் கைபிடித்து...
கடவிருக்கிறேன் என் மீத வாழ்க்கை பாதையை ,நம் நட்பின் நினைவிலும், புரிதலிலும் !!!!!!!