காதலில் தவிப்பு
தனிமையை அழகாக்க கற்றுக்கொண்டேன்
நீ தந்த தவிப்பால்...
தலையணை துவைக்கிறேன்
தனிமையின் இரவுகளில் கண்ணீரால்...
உன்னைத் தொலைத்தும் தேடுகிறேன்
எனக்குள் நீ தந்த நினைவுகளால்...
காதலை காதலில் உணர்கிறேன்
தனிமையை எனக்கு நீ பரிசளித்ததால்...
தூக்கத்தில் சிரிக்கிறேன், விழித்ததும் அழுகிறேன்
காண்பதெல்லாமே கனவென்பதால்...