நண்பன், நட்பு

சமவெளியில் இருந்து எதிரே
இமயத்தின் உச்சியைப் பார்ப்பதுபோல்
இருந்தது என் உயிர் நண்பனை நான்
பார்க்கும்போது , ஆம் இமயம்போல்
உயர்ந்த உள்ளத்தான் அவன் -வாழ்வில்
எல்லாம் இழந்து பதளிதில் சரிந்த
என்னை கைகொடுத்து தூக்கி
முன்னேற்றப் பாதையின் விளிம்பில்
மீண்டும் நிறுத்திய என் தெய்வம் அவன்
அவனே விளைநிலம்,அதில் அவனே
தன நட்பை விதைத்து அதன் பயன்
முழுவதையும் எனக்கே அறுவடையாய்
அளிக்கும் உயர்ந்த மனிதன் நல்ல நண்பன்
நட்பு என்ற இவ்விரு வார்த்தைக்கும்
இவன்தான் இலக்கணம்போல் இருப்பவன்
அவனில்லையேல் நான் இல்லை
என் உயிர்மூச்சும் ....என் உயிர் நண்பன் அவன்
இப்படியும் ஓர் பிறவியை படைத்தாய் இறைவா
உன்னை அவனில் காட்டவா ......

எழுதியவர் : வச்சான்-தமிழ்பித்தன்-வாச (15-Jul-18, 3:02 pm)
பார்வை : 1033

மேலே