ஏனோ தெரியவில்லை

ஏனோ தெரியவில்லை
பார்க்கும் பார்வைப் போதுமென்றே
நீ வரும் பாதையோரம் நானும்
நின்றேன்

ஏனோ தெரியவில்லை
பார்வை சேர்த்து நீயோ
இதழ்கள் பூத்தாய்
நம் இருதயம் கோர்த்து
இரட்டைகிளவிப் படித்தாய்

ஏனோ தெரியவில்லை
கதிரோன், காணும் முன்
காதலன், நானும் நின்
குடிலின், வாசல் முன்
தூக்கம் தொலைத்தேன்,

ஏனோ தெரியவில்லை,
நீயோ நின்
வெட்கம் தெளித்து
என்பக்கம் பார்த்து
காலை கோலம்மிட்டு
என்காதல் விடியலைத் தந்தாய்

ஏனோ தெரியவில்லை
நம்காதல் உச்சம் தொடுமுன்
உன்கண்கள் அச்சம் கொணர்ந்தது

ஏனோ தெரியவில்லை
என்மனதின் எச்சம் அறியும் முன்
உன்தந்தை உன்மனதை
வெந்தழலில் மெருகேற்றி
என்காதலை வந்த வழி அனுப்பி வைத்தான்....

நானோ,
ஏங்கித்துடித்தும்,
ஏனோ தெரியவில்லை
உன் நினைவைத்தாங்கித் தினம்,
தவிக்கிறேன் நானடி

ஏனோ தெரியவில்லை,
தூக்கம் தொலைத்த
இரவுகளெல்லாம்
பழிவாங்கத் துடிக்கிறது
என் கல்லறையில்......

தினம் பூக்கும் கல்லறையின்
புதுமை கதையல்ல காதல்
மனம் கோர்க்கும் காதலரின்
மரணம் சூடிய மகுடம் தான் காதல்.........

--கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (17-Jul-18, 11:59 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
Tanglish : eno theriyavillai
பார்வை : 412

மேலே