கல்லூரி நாட்கள்

அது கல்லூரி காலம்
அது ஒரு வசந்த காலம்
சிறகடித்து பறக்கும் காலம்
அது ஒரு திகட்டா வாழ்க்கை
மனிதனை காணும் ஒரு வாய்ப்பு
நட்பின் உயிர் துடிப்பு இங்கே காண்போம்
மனம் போல் வாழ்க்கை
கல்லூரி நாட்கள் நினைவுகளில் தேங்கிடும்
ஒரு சுகமான நீங்கா பசுமை
பாலைவனம் அங்கு இல்லை
வண்ண வண்ண மலர்களாய் பூக்கும் காலம்
எங்கும் புன்னகை அரும்பும்
கலாட்டாக்களுக்கு அங்கு பஞ்சம் இல்லை
நட்பிற்குள் அங்கு பிரிவுகள் இல்லை
சூதும் இல்லை வஞ்சகமும் இல்லை
ஓடி ஆடி விளையாடிய நாட்கள்
தித்திக்கும் நாட்கள்
மரத்தடி கூறும் எங்கள் சுகமான பேச்சுக்களை
வகுப்பறைகள் கூறும் எங்கள் வருகையை
கடைசி இருக்கைகள் கூறும் நாங்கள் செய்த தில்லுமுல்லு வேலைகளை
மறக்க முடியா வாழ்க்கை
தித்தித்திடும் நினைவுகள் அங்கே கிடைக்கவே
எப்படி கல்லூரி காலம் விட்டு வர இயலாமல்
தவிக்கும் மனது வருந்தும் உள்ளம்
வடிக்கும் கண்ணீர் பிரியா விடை பெரும் தோழிகள்
மீண்டும் இந்த வாழ்க்கை கனவாகவே வரும் என்று தவிக்கும் நான்
எல்லாம் மூட்டை கட்டி கொண்டு செல்கிறேன்
அந்த கல்லூரி நாட்களை கொண்டு ...............

எழுதியவர் : பிரகதி (31-Jul-18, 7:35 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : kalluuri nadkal
பார்வை : 5879

மேலே