எல்லா ஊரும் பிரார்த்திக்கிறது

தமிழுக்கும் தமிழ்
சமுதாயத்திற்கும்
முழு மூச்சாய்
உழைத்தவரின் மூச்சு
நூறாண்டு கடக்கட்டும்...

ஆண்டவன் இல்லையெனச்
சொல்லும் (தமிழகம்)
ஆண்டவன் (கலைஞர்)
இன்னும் வாழட்டும்...

இப்பூமிப்பந்தில்
தமிழ் பேசுவோரெல்லாம்
முத்தமிழறிஞர் இதயம்
இன்னும் துடித்திருக்க
மனம் துடிக்கின்றனர்...

திருவாரூர் பிறந்த கலைஞர்
உயிர் வாழ எல்லா ஊரும்
பிரார்த்திக்கிறது...

கலைஞர் நம்மோடு
இருக்கிறார் என்பதே போதும்
வேறென்ன வேண்டும்
எனக்கூறும் பல கோடித்
தமிழ் இதயங்கள் உண்டென
இத்தரணி பரணி பாடுகிறது...
👍🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Jul-18, 12:03 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 305

மேலே