அந்தி மயங்கும் வேளையிலே

இளந்தென்றல் காற்றாட
இளவேனில் பூத்தாட
வானரங்கள் குதூகலிக்க
வண்ணமான்கள் குதித்தோட
மயில்கள் நடனமாட
குயில்கள் கானம்பாட
பறவைகள் தாழமிட
பாய்ந்தொழுகி நதியோட
அன்னங்கள் நீந்தியெழ
கன்னங்கள் சிவந்த கிளி
காதலனின் உடல்தழுவ
அல்லிமலர் பூத்துநிற்கும்
அவ்வந்தி அழகினிலே
செவ்வந்தி மலர்போலே
நதிக்கரை மணல்மீது
நாயகன் மார்மீது
நாயகி சாய்ந்திருந்தாள்
நாணத்தால் மலர்முகத்தில்
செந்நிறம் தோய்த்திருந்தாள்


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Aug-18, 12:25 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 115

மேலே