ஆசை

உன்னோடு காதல் செய்து
காலம் கடக்கவே ஆசை ;
நம்மை சுற்றி அனைத்தும் சிலையாகி போக
உன் தோல் சாய்ந்து கதை பேசவே ஆசை ;
உன் கண்கள் கூறும்
ஆயிரம் கதைகள் கேட்கவே ஆசை ;
நீ நான் மட்டும் நேரம் செலவிட
ஓர் சுற்றுலா போகவே ஆசை ;
உன் கோபம் அறியவே
சிறு சண்டைகள் போடவே ஆசை ;
அன்பாய் நான் சமைக்க
நீ புன்னகையோடு ருசிக்கவே ஆசை ;
சோகம் உன்னை சூழும் போதேல்லாம்
உன் கவலை மறக்க மருந்தாகவே ஆசை ;
உன் வெற்றியிலும் வீழ்ச்சியிலும்
சமமாக பங்கேற்கவே ஆசை ;
அழகாய் அறிவாய் உன் போல்
இரு பிள்ளைகள் பெற்றெடுக்கவே ஆசை ;
மழை நாளில் என் பக்கம் நீ இருக்க
உன் அணைப்பை பெறவே ஆசை ;
உன் அன்பை முழுவதுமாய் பெற்று
தினம் தினம் காதல் செய்யவே ஆசை ;
முதுமையிலும் திகட்டாத நீ கொடுக்கும்
நெற்றி முத்தம் பெறவே ஆசை ;
என் வாழ்நாள் முழுவதும்
உன் தாரமாய்,தாயாய்,தோழியாய்,
உன்னில் பாதியாய் இருக்கவே ஆசை ;
இவ்வனைத்தும் நிறைவேற
அடுதிங்கோர் பிறவி வேண்டுமடா.........