என்ன செய்ய

நாள் முழுக்க பேசிக்கொண்டு பக்கத்திலேயே இருந்த பிறகும்...!
விடை பெரும் சமயத்தில்...
என் கைகளை இறுக பற்றிகொள்வாயே...!
அந்த ஒரு நொடியில் ஒட்டு மொத்தமாய் கரைந்து போனது,
இதுவரை கடந்த அத்தனை நிமிடங்களும்...!
இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே கையை பற்றி கொண்டு இருப்பாயா..?
என என் மனம் ஏங்கினாலும்,
சரி நேரம் ஆகிடுச்சு கிளம்படுமா..?
என கேக்கும் என் பொய்யான உதடுகளை என்ன செய்ய..?

எழுதியவர் : நதி (13-Aug-18, 2:53 pm)
Tanglish : yenna seiya
பார்வை : 155

மேலே