எங்கும் எனத் தொடங்கி இதம் என முடியும் வெண்பா

எங்கும் எனத் தொடங்கி இதம் என முடியும் வெண்பா...!!!

எங்கும் மழைச்சாரல் இன்பம் விதைத்திட
வங்கக் கடலலைகள் வாழ்த்திடச் - செங்காற்றின்
தாலாட்டில் ஓடமும் தானாட, மீனவர்தம்
ஏலேலோ பாட்டும் இதம்.

எங்கு மமைதி யினிதாய் நிறைந்திடில்
தங்கும் மகிழ்ச்சி தரணியில்! - பொங்கும்
புனலாய்ப் பெருகிடும் புத்துணர்வில் கூடி
இனத்துடன் வாழ்தல் இதம்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Aug-18, 1:24 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 53

மேலே