காதல்

என்னை மறந்ததேனோ நீ
என்னவனே இங்கோ நான்
உன்னை மறவாது உன்
நினைவிலே இன்னும் வாழ்கின்றேன்
நீ இல்லா வாழ்க்கை வற்றிய
நதிபோல் ஆனதே -ஆயினும்
ஒரு நாள் என்னை நினைப்பாய்
என்னிடம் மீண்டும் வந்தடைவாய்
வற்றிய நதியில் பாயும் நீர்போல
அதனால் இன்னும் உன் நினைவிலேயே
வாழ்கிறேனடா என்னவனே
அப்படி ஒரு கால் நீ மறந்தோ, மறவாதோ
வாராது போனாலும் ஒரு போதும்
உன்னை மறந்திட முடியாது என்னால்
உனக்காகவே பிறந்து வளர்ந்தேன் நான்
ஒரு நாள் இவ்வுயிர்ப் பிரிந்தாலும்
பிரியும் முன் உன் நினைவிலேதான் பிரியும்
இது வெறும் பேச்சல்ல நீ அறிவாய்
ஜென்ம பந்தமாய் என் நெஞ்சில் வளர்ந்த காதல்
ஏனோ உன் நெஞ்சில் அரும்பி அழிந்ததோ
நீ இப்படி என்னை மறந்து வாழ
காலமே நீதான் இதற்கு பதில் சொல்லவேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-18, 12:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே