புதிதாய் ஒருவிதி செய்வோம்---பதின்சீர் விருத்தம்---

பதின்சீர் விருத்தம் :


கால்வைக்கும் தெருவோரம் கல்லெறிய மறைந்து நிற்பார்
*****கனற்சொல்லில் மனங்கொன்று குரைத்தங்கு வழிம றைப்பார்
வேல்வைக்கும் குலமென்பார் வேதமென்றும் ஒதுக்கி வைப்பார்
*****வீதிக்குள் ஒன்றென்பார் வீட்டுக்குள் அழைக்க மாட்டார்
மால்வைக்கும் கோவிலென்றும் மாதாவின் கோவி லென்றும்
*****மதம்பிடித்து மனிதத்தின் புனிதத்தை வதைத்துச் செல்வார்
பால்வைக்கும் புற்றுக்குள் பாம்புகட்போல் விடத்தைக் கொண்டோர்
*****பார்மிசையில் யாவருமோர் உறவென்று நினைத்தல் நன்றே...

நன்னாட்டு வேந்தனவன் நன்னெறியில் கடமை யாற்றும்
*****நறுமணத்தில் குடிமக்கள் பொழில்வண்டாய் மகிழ்ந்தி ருத்தல்
பன்னாட்டு நிறுவனங்கள் பசுந்தளிரில் வளர்ந்து நிற்றல்
*****பகற்கனவாய் மாறிநிலம் நவமணிகள் விதைத்த றுத்தல்
தென்னாட்டு மண்ணுக்குத் தீவைத்து வளத்தைச் சேர்க்கும்
*****செம்மரையின் கொடியுடையோர் வீழ்ந்தோட வழிவ குத்தல்
இன்னாட்டு வண்கையுளோர் இரந்துவாழும் மெலியோர் வாழ்வில்
*****ஏற்றிவிடும் ஏணியாதல் யாவுமிங்கே நடத்தல் நன்றே...



(காய் காய் காய் மா தேமா)

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 9:33 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 3133

மேலே