அவள் வருவாளா

கடவுள் நேரில் வந்தால்
r இது கேட்பேன், அது கேட்பேன்
என்றெண்ணி, அவர் நேரில்
தரிசனம் தந்தபோது
கேட்க ஒன்றும் தெரியாது
வாயடைத்து நின்றதுபோல்
அழகி ஒருத்தி நேரில் தோன்றி
அதுவும் பார்வையும் செலுத்தி
'என்னை காதலிப்பாயா' என்று
கேட்கவும் செய்ய- அவலழகில்
அப்படியே மயங்கி
வாயடைத்துப்போனேன்- பேசவில்லை
கேட்கவும் இல்லை ஏதும்
என்னை மறந்து - பட்டென்று
யாரோ கன்னத்தில் அடித்ததுபோல்
உணர்ந்தேன் , சுயநினைவில் இப்போது நான்..............
கண்திறந்து பார்த்தேன்
அவள் இல்லை ..................
என்ன இது நிஜமா , பிரமையா
புரியாது நான்........
மீண்டும் அவளை காணும்வரை
இதற்கேது பதில்
அவளுக்காக அந்த அவளைக்காண
உள்ளம் துடி துடிக்க
தினமும் காத்திருக்கும் நான்.
அவள் வருவாளா , கிடைப்பாளா
காதலி என்னை என்று கூறுவாளா
அவள் வந்தால், அப்படி கூறினால்
என்னையே உனக்கு அர்பணிப்பேன் என்பேனே


l

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-18, 11:52 am)
பார்வை : 122

மேலே