இயேசுவும்,கிறிஸ்துவும்

கிறிஸ்துவும் ,கிருஷ்ணனும்

முதல் பொருள் வடிவினராய் இருவரும்..
இடையர்எனும் பெயரினராய் இருவரும்...
கடைத்தேற்ற வந்தவராய் இருவரும்...

மனிதம் காக்க வந்தவராய் இருவரும்...
கனிந்தஅன்பு மொழியினராய்இருவரும்..
புனித நூல் தந்தவராய் இருவரும்...

இருவரையும் ஒருமுகமாய் உருகிமருகி
இறைஞ்சினால் துயருருவதில்லை ஒருவரும்...

இறையாற்றல் உருவகமே
இம்மேன்மை பெற்ற இருவரும்.

எழுதியவர் : Usharani (2-Sep-18, 5:57 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 50

மேலே