அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு---------------------மலரும் நினைவலைகள் -----------

4 வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.

7 வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.

8 வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.

12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க அவசியமில்லை.

14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.

21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த என்ன எதிர் பார்க்க முடியும்?

25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.

30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்

35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும்.

50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?

60 வயதில் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.

65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு யோசனை கேட்கலாம்.



படித்ததும் பகிர்ந்ததும் - வீணா

எழுதியவர் : (7-Sep-18, 7:12 pm)
பார்வை : 60

மேலே