குறள் வெண்பா

வாழ்நாள் உழைப்புறிஞ்சி வாழ்ந்தொருவர் வாழ்வினை
தாழ்ந்த தெனவிகழ்தல் தப்பு.
**
பொய்யன்பு காட்டிப் புரியாமல் வாழ்ந்ததை
தெய்வீக மென்பதே தீங்கு.
**
பகட்டுக்காய் வாழ்வை படம்போட்டுக் காட்டிச்
சுகங்கெட்டுப் போதல் சுமை.
**
ஊர்சொத்தைக் கையாண்டு உத்தமர்போ லன்பளித்துப்
பேர்பெற்றுக் கொள்ளல் பிழை.
**
நல்லவர்போல் வாழ்வில் நடிப்பது நன்றன்று
நல்லவராய் வாழ்வதே நன்று.
**
வாக்கிற்கு வாக்கு வரம்பின்றிப் பேசிடும்
நாக்கிழுத்துப் பூட்டல் நலம்.
**